இந்தியாவில் 180 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுகுறித்து ஓர் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு:

நாட்டில் பல தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்தும் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி வருகிறது. மேலும் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமாக இருந்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் கொரோனா தொற்றினை விரட்டுவதற்கான அனைத்து பணிகளிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஓர் தகவலை வெளியிடுள்ளார்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கடைகள் செயல்படும் – அரசு உத்தரவு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அவர் கூறியதாவது இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 180 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களிலும், 21 நாட்களாக 54 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here