தமிழகத்தில் இன்றும், நாளையும் கடைகள் செயல்படும் – அரசு உத்தரவு!!

0

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றும் (மே 8) நாளையும் (மே 9) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

கடைகள் திறப்பு

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்குடன் கூடிய வார இறுதி பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் மேல் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதனால் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து, மாநில அரசு ஆலோசித்து வந்தது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – மே 16 முதல் அமல்!!

அதன்படி மே மாதம் 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக, மதவழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், மால்கள், திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், மளிகை கடைகள் போன்றவற்றிற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் கூறப்பட்டதாவது, தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ந்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள இன்று (மே 8) மற்றும் நாளை (மே 9) அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here