பாரதியார் பல்கலையில் மே 10 முதல் செமஸ்டர் தேர்வுகள் – ஆன்லைனில் நடைபெறும்!!

0

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் மே 10ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வுகள்:

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் காட்டுத்தீயைப் போல் பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலம் முழுவதும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தும், 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் சலூன் கடைகள் செயல்படும் – அரசு உத்தரவு!!

தற்போது நோயின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் நடக்க இருந்த பல்கலை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு நேரடி தேர்வுகளை நடத்த தடை விதித்துள்ளது. பாடங்களையும் ஆன்லைன் முறையின் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் செமெஸ்டர் தேர்வுகள் தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் மே 10 ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here