முழு ஊரடங்கு எதிரொலி – திண்டுக்கல்லில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை குறைக்கும் வகையில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை அனைத்து வகையான கடைகள் மற்றும் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் மக்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றினை விரட்டும் வகையில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி என்றும் இந்த இரு தினங்களில் 24 மணி நேரமும் பொதுப்போக்குவரத்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் தற்போதே கடைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி தற்போது திண்டுக்கல் பகுதியில் மக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் சாலைகளில் அலைமோதி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 15% உயர்ந்த கொரோனா தொற்று – அரசு மருத்துவ ஆலோசகர்!!

இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை சரிசெய்ய போலீசார் அங்கு வராததால் பொதுமக்களே 2 மணி நேரம் போராடி அதனை சரி செய்தனர். மேலும் தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர். இதனை கட்டுப்படுத்த அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here