அரசு பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவை, இனி ஆன்லைன் மூலம் பராமரிக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு முடிவு:
பள்ளி மாணவர்களுக்கு இறுதி பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது சார்ந்த தீவிர பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், உத்திரபிரதேச அரசு சமீபத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறைக்கு மாற்றியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.7% ஆக பதிவாகி இருந்தது. இதனை கவனத்தில் கொண்ட கல்வித்துறை, மேல்நிலை பள்ளி மாணவர்களின் வருகை பதிவை, ஆன்லைன் மூலம் பராமரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு ஷாக்., பால் உற்பத்தியாளர் திடீர் ஸ்டிரைக்! தடைபடும் மொத்த விநியோகம்!!
இது குறித்த பேசிய, கல்வி அமைச்சர் குலாப் தேவி, தற்போது 80.4% மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில், இவர்களின் வருகை பதிவை ஆன்லைன் டேஷ்போர்டு மூலம் கண்காணிக்க உள்ளதாக அறிவித்தார். முழுக்க முழுக்க இது இடைநிற்றலை குறைப்பதற்கான நடவடிக்கை என விளக்கம் அளித்தார். அரசின் இந்த உத்தரவுக்கு தற்போது பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.