2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணையை தற்போது சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தின் பேரில் 2016ம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜெயகுமாரிடம் தலா ரூ. 7 லட்சம் கொடுத்து வி.ஏ.ஓ தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருந்த சென்னையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற கபிலன் மற்றும் கன்னியகுமாரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.
சிபிசிஐடி போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் இன்னும் பல மோசடிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிய வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |