மத்திய நிதி அமைச்சகம் விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டினை புழக்கத்தில் விட உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே கள்ளநோட்டு போன்ற பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ள, புதிய 2000, 500, 200, 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை விதவிதமான வண்ணத்தில் வெளியிட்டது. அந்த வகையில் புதிய ஒரு ரூபாய் நோட்டும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இளஞ்சிவப்பு ஒரு ரூபாய் நோட்டு..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
புதிய ஒரு ரூபாய் நோட்டு ஆனது நூறு 100% சதவீதம் பருத்தி காகிதத்துடன் 110 மைக்ரான் தடிமன் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடையில் உருவாக்கப்பட உள்ளது. மேலும் இது 9.7 x 6.3 செ.மீ அளவில் செவ்வக வடிவில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த நோட்டின் முழுவதும் இளஞ்சிவப்பு பச்சை நிறமாகவும், பிற வண்ணங்களுடன் இணைந்து தலைகீழாகவும் இருக்கும். நோட்டின் மையத்தில் மறைவாக 1 என்று அசோகசின்னத்துடன் அச்சடிக்கப்படும்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இப்புதிய ஒரு ரூபாய் நோட்டில் இடமிருந்து வலமாக எண்களின் ஏறுவரிசையிலும், வலது புறத்தின் கீழ் எண் கருப்பு நிறத்தில் இருக்கும், அதே நேரத்தில் முதல் மூன்று எண்ணெழுத்துகள் அளவு மாறாமல் இருக்கும். ஒரு ரூபாய் நோட்டின் எதிரெதிர் பக்கத்தில் “இந்திய அரசு” என்ற சொற்களுக்கும், நிதி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ அதானு சக்ரவர்த்தியின் இருமொழி கையொப்பமும் இடம் பெற்றிருக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |