கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா’, ‛லாக் டவுன்’ என பெயர் சூட்டியுள்ளனர்.
‘கொரோனா ‘..!
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையின் மாமா ‛கொரோனா’ என பெயர் சூட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என பெயரிட்டேன், என்றார்.
‛லாக் டவுன்’..!
அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன்’ என பெயரிட்டுள்ளனர். ‘லாக் டவுன்’ குழந்தையின் தந்தை பவன் கூறுகையில் 29ம் தேதி மாலை ஆண் குழந்தையை பிறந்தது.
நாம் அனைவரும் கொரோனா தொற்றுநோய்க்கு ஆளாகி வருவதால் குழந்தைக்கு லாக் டவுன் என பெயரிட்டேன். கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தங்களையும் தேசத்தையும் காப்பாற்றவும் என் மகன் அனைவருக்கும் நினைவூட்டுவான். இவ்வாறு அவர் கூறினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |