மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து இரு துறை சார்ந்த படிப்பின் மீது ஆர்வம் உள்ள மாணவர்கள் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் மேற்கொள்ள UGC உத்தரவிட்டிருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த அறிவிப்பால் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டபடிப்புகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் வேறு கல்லூரிகளில் உள்ள பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்கும் போது இடமாற்று அல்லது அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்தல் போன்ற சிரமத்திற்கு உள்ளாகினார்கள் .
90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது.., சோறுகாக காதலனை அத்துவிட்ட நபர்!!!
இதனால் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டபடிப்புகளை மேற்கொள்ள உயர்கல்வி நிர்வாகம் வழிகாட்ட வேண்டும். மேலும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காமல் எளிய முறையில் விண்ணப்பிக்க கல்லூரிகளில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என UGC செயலர் தாகூர் தெரிவித்துள்ளார்.