கிணற்றில் வீசப்பட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு – கள்ளக்குறிச்சியில் கொடூரம்..!

0

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் தூக்கி வீசியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் வசித்து வருபவர் வள்ளி. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது. இவரது மகள் கீர்த்தனாவுக்கும் நீலமங்கலம் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அமுதவல்லி(2), ரிஷிகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ENEWZ சமூக வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்நிலையில் கீர்த்தனா காலையில் எழுந்த போது அருகில் படுத்திருந்த குழந்தைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே தனது அம்மாவிடம் இதைப்பற்றி கேட்க அவர் முன்னுக்கு பிரணாகச் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வள்ளியிடம் விசாரணை நடத்தியபோது இரண்டு குழந்தைகளும் கிணற்றில் வீசி விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் உதயமாமபட்டு சாலையிலுள்ள கிணற்றில் தேடிப்பார்த்தபோது அங்கு இரண்டு குழந்தைகளும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

சவுதியில் ஹஜ் யாத்திரை துவக்கம்!!

இதையடுத்து மனநிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் வள்ளியிடம் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here