ஆன்லைன் வகுப்புகளுக்கான செயல்முறைகளை இப்படி தான் பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பொது முடக்க நீடிப்பு:
கொரோனா பரவல், இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் தமிழக அரசு பொது முடக்க உத்தரவை நீடித்து உள்ளது. இதனால், பலிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் கம்மியாக உள்ளது. அதனால், ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதற்கு, சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது அரசு. மாணவர்களின் நலன் கருதியும் அவர்களது உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
என்ன என்ன கட்டுப்பாடுகள்:
மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பு குறைந்தபட்சமாக 40 முதல் 45 நிமிடங்கள் வரை தான் இருக்க வேண்டும். காலை 9 மணி முதல் இரவு 7 மணி குள் இந்த வகுப்புகள் இருக்க வேண்டும். முறையாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவேளை விட வேண்டும், அதுவும் ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் விட வேண்டும்.
சரக்கடித்துவிட்டு தொப்புள் தெரிய குத்தாட்டம்போடும் அமலாபால் – வைரல் வீடியோ!!
ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் வரை எடுக்கலாம், மொத்தமாக ஒரு மாதத்திற்கு 28 வகுப்புகள் தான் எடுக்க வேண்டும். வாரநாட்களில், 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக 40 நிமிடங்கள் தான் ஆன்லைன் வகுப்புகள் இருக்க வேண்டும்.
இந்த வழிமுறைகள் பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடபட்டு உள்ளது. பெற்றோர்களிடம் இருந்து அதிகமாக புகார் எழுந்ததால் இந்த நடவடிக்கையை பள்ளிக்கல்விதுறை எடுத்துள்ளது.