‘கார்களில் இரண்டு ஏர்பேக்குகள் கட்டாயம்’ – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு!!

0

சாலை பாதுகாப்பு கருதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கார்களில் இரண்டு ஏற்பக்குகளை கட்டாய முறையில் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு:

நாட்டில் கடந்த சில தினங்களாகவே சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது உயிர்களை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் இது குறைந்த பாடில்லை என்று தான் சொல்லவேண்டும்.

தற்போது நாட்டில் உயிர் சேதத்தை தடுக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வரும் கார்களில் கட்டாயமாக இரு ஏர்பேக்குகள் அமைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் முன்பும் அவருக்கு அருகில் இருப்பவர் முன்பும் ஏர்பேக்குகள் பொறுத்த உத்தரவிட்டுள்ளது.

‘நான் ஒன்றும் மலிவான நபர் இல்லை’ – டாப்ஸி ஆவேசம்!!

மேலும் இதனை அடுத்த மாதம் 1ம் தேதிக்குள் கட்டாயமாக பொறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போது விற்பனையில் உள்ள கார்களில் வருகிற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இரு ஏர்பேக்குகளை பொறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here