துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி திரட்டும் வகையில், ரொனால்டோ இறங்கி உள்ளார்.
ரொனால்டோ:
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 9000-த்தை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இன்னும், இடிப்பாடுக்குள் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நாடுகள் அனைத்தும் உதவ முன்வந்துள்ளனர். இதற்கிடையில், கால்பந்து நட்சத்திர வீரரான ரொனால்டோவும் தன் பங்கிற்கு உதவ உள்ளார்.
அதாவது, துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல், ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் விட உள்ளதாக, ரொனால்டோவின் சமந்தத்துடன் அறிவித்துள்ளார். இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையை, நிலநடுத்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக செலுத்த உள்ளதாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.