நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்வோருக்கு ஏகப்பட்ட சலுகைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ரயிலில் பயணம் செய்யும் சிலருக்கு 75% வரை டிக்கெட் விலையில் சலுகை கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். அது யார் யாருக்கு என்று இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், உதவி இன்றி பயணிக்க முடியாதவர்கள், காச நோய், சிறுநீரகம் போன்ற நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் தர ஏசி பெட்டிகளில் 75 சதவீதம் வரை டிக்கெட் தள்ளுபடி கிடைக்கும்.
அதே சமயம் இரண்டாவது மற்றும் முதல் தர ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதற்கு 50 சதவீதம் வரை டிக்கெட் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் மாணவர்கள், போர் விதவைகள், IPKF விதவைகள், கார்கில் தியாகிகளின் விதவைகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் விதவைகள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், ரயில் பயணத்தின் போது டிக்கெட் சலுகை இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.