7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அம்மாநில அரசு ஹோலி பண்டிகை பரிசை அறிவித்துள்ளது.
ரயில் பயணிகளே.., இனி 75 சதவீதம் வரை டிக்கெட் சலுகை கிடைக்கும்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
அதாவது 2024 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மாநில அரசிற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.314 கோடி கூடுதல் நிதி சுமை உருவாகும். ஆனாலும் உத்தரபிரதேசத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், 8 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.