செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இதன்பின் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதால், இதுவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அதில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் மார்ச் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவரின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.