தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை, போட்டி தேர்வுகள் மூலம் TNUSRB தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி, அண்மையில் முடிவுகளை வெளியிட்டு இருந்தனர்.
25வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!
இதைத்தொடர்ந்து நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு அறிவிப்பு, வருகிற ஜூன் மாதம் வெளியிட இருப்பதாக TNUSRB தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால் தகுதியான தேர்வர்கள், இப்போதிலிருந்தே மும்முரமாக தயாராக வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். கூடுதல் தேர்வாணைய விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடலாம்.