போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சியில் சில இடங்களில் மாற்றம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை அதிகரிப்பதை போல வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் வாகனங்கள் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வளர்ந்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப மக்களின் பாதுகாப்பு கருதி பாதையை அகலப்படுத்துதல், மேம்பாலம், சாலை சீரமைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது என்றும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து பெரு நகரங்களில் தலைவர்கள் வருகை, பேரணி, கூட்டம் என அவ்வப்போது போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
மழைக்காலங்களில் இனி இந்த பிரச்சனையே இல்லை., ரூ.1.71 கோடி செலவில் அரசின் சூப்பர் திட்டம்!!
இதனால் மக்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. ரயில் நிலைய சாலை (மேல வெளிவீதி), மேல மார்ட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு ஆகிய சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்துள்ளதாக மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.