ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து – மாரி 2 வில்லன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

0
டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள திரைப்பட நடிகரான டொவினோ தாமஸ் படப்பிடிப்பின் போது வயிற்றில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலரும் அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

டொவினோ தாமஸ்

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட மலையாள நடிகரான டொவினோ தாமஸ் வில்லன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்பவர். இதனால் மலையாளத்தில் சிறந்த வில்லனாக கருதப்படுகிறார். மேலும் தனது நடிப்புக்காக விருதுகளையும் பெற்றுள்ளார். 2015 என்னு நின்டே மொகிதீன் என்ற படத்திற்காக சிறந்த சப்போர்டிங் ஆக்டர்கான விருதை பெற்றார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவ்வாறு தனது அனைத்து படங்களிலும் தனது முழு நடிப்பு திறமையும் வெளிக்காட்டி இருப்பார் டொவினோ தாமஸ். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. வி.எஸ். ரோஹித் இயக்கத்தில் காலா என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தார்.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

அப்பொழுது சண்டை காட்சிகள் இடம் பெற்றதால் அதில் நடித்து கொண்டிருக்கும் போது அடி வயிற்றில் அடிபட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் பதறி போய் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

ரத்தக் கசிவு வேறு ஏற்பட்டதால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் பலர் ஷாக் ஆகி உள்ளனர். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here