தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இப்போது தென்மேற்கு பருவமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடி வரை உயர்ந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் தற்போது ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரிசல் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., வெளியான முக்கிய தகவல்!!