மக்களே உஷார்.., நாளை இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது – வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
நாளை இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை கூட உடனுக்குடன் பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து வருகிறது. அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் சமயத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்பட இருக்கும் மாவட்டம்  குறித்து மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, எரிபுத்தூர், கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here