ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இனி இத செய்யக்கூடாது.., ரயில்வே நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை!!!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இனி இத செய்யக்கூடாது.., ரயில்வே நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை!!!
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ரயிலில் பயணிக்கும் போது எந்த ஒரு விபத்தும் ஏற்படக் கூடாது என்பதற்காக பிளாஸ்டிக், வெடி பொருட்கள் போன்றவற்றை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளனர்.
தற்போது இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் யாரும் சட்டவிரோதமாக வீடியோ எடுத்து அதை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளனர். இந்த அறிவிப்பையும் மீறி வீடியோ எடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here