அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் தடையில்லாமல் பெறுவதற்கு ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக உள்ளது. இதற்காக வங்கி கிளைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டதால் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் 100 நகரங்களில் 500 இடங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 2.0 திட்டத்தையும் மத்திய அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதால் பலரும் பயனடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதன்படி நடப்பு 2023ஆம் ஆண்டில் நவம்பர் 28ஆம் தேதி வரை 1,13,10,388 ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மக்களே உஷார்.., நாளை இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது – வெளியான முக்கிய அறிவிப்பு!!