தமிழக மக்களே உஷார்., அடுத்து 7 நாளுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!

0
தமிழக மக்களே உஷார்., அடுத்து 7 நாளுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல்  இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
இதோடு அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மணிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடம் மற்றும் அதையொட்டி உள்ள லட்சத்தீவில் 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் டிசம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here