தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் சில பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் நாளை செங்கல்பட்டு , காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி என 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.