இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சித்திர பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 3வது T20 போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்கை நேற்று (நவம்பர் 28) கரம் பிடித்தார் முகேஷ் குமார்.
இவர்களது திருமணம் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்றது. இதை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் MUKESH KUMAR, CAUGHT & BOWLED ft. DIVYA SINGH, WELCOME TO THE DC FAMILY, DIVYA என்று பதிவிட்டு புகைப்படத்தை இணைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
View this post on Instagram