இயக்குனர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த விஷயம் கோலிவுட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று ஞானவேல் ராஜா மனம் வருந்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிராக இயக்குனர் சசிகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா குறித்து கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள் தான் என்ன? மேலும் ஞானவேல் ராஜா சில வார்த்தைகள் பயன்படுத்தி அமீரை புண்படுத்தி இருந்தால், அந்த சில வார்த்தைகள் தான் என்ன? சொல்ல போனால் திட்டமிட்டு ஒருவரை அவமானப் படுத்தி விட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு அவர் என்னதான் சொல்ல வருகிறார்? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? என்று சசிகுமார் பதிவிட்டு உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக பள்ளி மாணவர்களே.., காலை உணவுத் திட்டத்தில் ஏற்படும் மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!