தமிழக பள்ளி மாணவர்களே.., காலை உணவுத் திட்டத்தில் ஏற்படும் மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த காலை உணவு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி இருக்கையில் தற்போது சென்னை மாநகராட்சி காலை உணவு திட்டம் குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது அடுத்த ஓராண்டுக்கு காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்கான தீர்மானம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here