கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சொல்லப்போனால் கோடை வெயிலை விட வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், தற்போது தான் சூட்டை தணிக்கும் விதமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்ய கூடும். மேலும் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.