தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் மதிய வேலையில் வெளியே செல்வதற்கு கூட மிகவும் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் மக்களை குளிர்விக்கும் வகையில் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மற்ற பகுதிகளில் மிதமான மழையும் சில இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளனர்.