மத்திய மற்றும் மாநில அரசுகள் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துகளை குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் சாலை விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் தானியங்கி விபத்து தடுப்புகளும் ஒளிரும் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியில் சாலை மேம்பாலங்கள், சிறிய சாலைகள் போன்றவை கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.