தென்னிந்திய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது எக்கசக்க படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடைசியாக நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன போது பெரிய சர்ச்சையில் சிக்கி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு ஓடிடி தளத்தில் இருந்து படத்தை நீக்கிவிட்டனர்.
இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை நயன்தாரா அடுத்ததாக இயக்குனர் சசிகுமார் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படமும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.