தமிழக மக்களே அலர்ட்., இந்த பகுதியில் 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை., வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழக மக்களே அலர்ட்., இந்த பகுதியில் 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை., வானிலை மையம் அறிவிப்பு!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது இதையடுத்து பருவமழை குறைந்த நிலையில் தற்போது பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு    தமிழகம், புதுவை, காரைக்கால்  உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடுமாம். இதற்கிடையில் கிழக்கு திசை காற்றழுத்தம் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் இணைந்த பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். இதோடு இன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here