சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழனி முருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல ஐகோர்ட் தடை விதித்து இருந்தனர். இந்நிலையில் இந்து மதம் அல்லாதவர்கள் கோவில்களில் நுழைவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து அல்லாத மதத்தை சேர்ந்தவர்கள், கொடிமரத்தை தாண்டி செல்லக்கூடாது. இது தொடர்பான அறிவிப்பை அனைத்து கோவில்களிலும் பலகையில் எழுதி, பக்தர்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.