சர்வதேச இந்திய அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி விலகிய நிலையில் அவர் தொடர்பான சர்ச்சைகள் உலா வந்து கொண்டிருந்தன. குறிப்பாக நெட்டிசன்கள் ஒரு படி மேலே சென்று அவரின் தாயின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் விராட் கோலியின் சகோதரர் ஓர் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய தாயின் உடல்நிலை தொடர்பாக பரவி வரும் தகவல்கள் உண்மை இல்லை, அவர் நலமாக உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என கூறி தனது கருத்தை முடித்துள்ளார். எனவே இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக மக்களே அலர்ட்., இந்த பகுதியில் 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை., வானிலை மையம் அறிவிப்பு!!