சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பருவமழை ஓரளவு பெய்து வரும் நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளனர். இதனால் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.