தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அண்மையில் முடிவுற்றது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய உத்தரவை மாநில பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழக தேர்வுகளில் அனுமதிக்கப்படும் மாணவர்கள், குறைந்த பட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு தகுதியை பெற்று இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதேபோல் 75 சதவீதத்திற்கும் கீழ் வருகைப் பதிவை கொண்ட மாணவர்கள், சரியான காரணங்களை கூறும் பட்சத்தில், முறையான ஆய்வு மேற்கொண்ட பிறகு பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவுகளை அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் விரிவுபடுத்திய காலை உணவு திட்டம்.., இந்திய அளவில் ட்ரெண்டாகும் #ThankYouCMSir!!!