கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. ஆனால் தற்போது பருவ மழை படிப்படியாக குறைந்த நிலையில் பரவலாக பனிமூட்டம் நிலவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது அடுத்த 7 நாட்களுக்கு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், காரைக்கால், புதுவை உள்ளிட்ட பகுதியில் கடும் பனி நிலவ கூடுமாம். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட்ட வாய்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் மூடுபனியால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.