தமிழக மக்களே., அடுத்து இத்தனை நாட்களுக்கு கொட்ட இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

0
தமிழக மக்களே., அடுத்து இத்தனை நாட்களுக்கு கொட்ட இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வந்தனர். இந்நிலையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம், காரைக்கால், புதுவை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, விருதுநகர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல்‌ மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று மட்டும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here