தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வேலை செய்பவர்களின் சம்பள விதிமுறைகளை மாற்றி அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (ABPS) மூலம் ஊதியங்களை வழங்க கடந்தாண்டு முதல் ஐந்து முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தில் தகுதியற்றவர்களாக 34.8 சதவீத பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இனியும் காலக்கெடு நீடிக்கப்படாமல் விரைந்து அமலுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது