சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!!

0
சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்..

சென்னையில் பல இடங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் புயல் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் சேதம் அடைந்து வருகின்றது. பல இடங்களின் சாலைகள் குண்டும் குழியாக உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் தான் அதிக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது சென்னையின் முக்கிய சாலையில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி பார்ப்போம்.

அதாவது சென்னை அம்பத்தூரில் உள்ள ஐந்து ஆலமரம் சாலையில் திடீரென்று 12 அடிக்கு பள்ளம் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னது., பிச்சைக்காரன் பட ஹீரோயினுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கா?? வைரலாக புகைப்படம்., ரசிகர்கள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here