தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
Enewz Tamil WhatsApp Channel
அதுமட்டுமின்றி நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., ரூ.262 கோடி நிதி ஒதுக்கீடு!!!