தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டமானது கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் ஈச்சாங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்துள்ளார்.