தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பா.ஜ.க. MP காந்தியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்வேறு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தமிழகத்தில் 55 கலை அறிவியல் கல்லூரி மற்றும் 26 பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.262 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கணினி, ஆய்வகங்கள், கட்டங்கள் உள்ளிட்டவை மேம்படுத்த இருப்பதால் பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.