தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் எடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்றும் முதல் அடுத்த 5 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள், கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.