தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தவிர மாதவரம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர், அம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.