திருமண வாழ்க்கையில் ஈடுபடும் கணவன், மனைவி இருவரும் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் கால நேரமில்லாமல் உழைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு “கணவன் சம்பாத்தியத்தில் சேர்க்கப்படும் சொத்தில் அவரது மனைவிக்கு சமபங்கு உண்டு” என அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த தீர்ப்பு பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த உத்தரவு தீர்ப்பு என்கிற நிலையிலே இல்லாமல் அடிப்படை சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார்.