![தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!! தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!](https://enewz.in/wp-content/uploads/2024/05/FEA-2024-05-28T095837.467-768x577.jpg)
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும்.