தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 19 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, கோவை, கரூர், சென்னை, நாகை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நகரின் முக்கிய இடங்களில் 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.