தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்த நிலையில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது போக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இனி.., கழிவு நீரை கையால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.., சண்டிகர் அரசு எடுத்த புதிய முயற்சி!!